கனேடிய கடற்படையின் பசுபிக் தளபதி சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் பேச்சு
கனடாவின் பசுபிக் மரைன் படைப்பிரிவு மற்றும் பசுபிக் கூட்டு அதிரடிப் படைப்பிரிவின் தளபதி றியர் அட்மிரல் ஆர்ட் மக் டொனால்ட் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கொழும்பு வந்துள்ள கனேடியக் கடற்படையின் போர்க்கப்பலான எச்எம்சிஎஸ் வின்னிபெக்கின் கட்டளை அதிகாரியான ஜெப்ரி ஹட்சிசன் மற்றும் கொழும்பில் உள்ள கனேடிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் மார்க் டசோல்ட், அரசியல் வர்த்தக கொன்சீலர் ஜெனிபர் ஹார்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.