மேலும்

இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்த சிறிலங்கா விருப்பம்

ranilஎழுந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல்சார் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்கு இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சிமாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிமசிங்க முன்மொழிந்துள்ளார்.

மெல்பேர்ணில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையின் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் அமைதியான, சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வழிகளை கண்டறிவதற்கான இந்த உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சிறிலங்கா விருப்பம் கொண்டுள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபை, பிரதான கடல்சார் அமைப்புகள் மற்றும் இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் போர்க்கப்பல்களுக்கான வழிகாட்டு முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *