மேலும்

நாள்: 4th January 2017

பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படும் பலாலி – சிறிலங்கா பிரதமர்

தென்னிந்தியாவுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – செயலணியின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு

போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி முன்வைத்திருந்த அறிக்கையின் பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மகாநாயக்கர்களிடம் மூக்குடைபட்டது கூட்டு எதிரணி

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டை படித்துப் பார்க்காமல், அதனை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

வனாட்டு தீவில் சிறிலங்கா மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய கப்பல் தடுத்து வைப்பு

பசுபிக் தீவான வனாட்டுவில் சிறிலங்காவைச் சேர்ந்த மாலுமிகளுடன் சந்தேகத்துக்குரிய எம்.வி.குளோரி (MV Glory) என்ற பெயர் கொண்ட மீன்பிடிக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வனாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – சிறிலங்கா அரசு

எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

செயலணியின் அறிக்கையை பெறுவதில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ள, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொள்ளாமல் நழுவியுள்ளார்.

சரணடைந்த புலிகளின் பட்டியலை ஜனவரி 30இல் சமர்ப்பிக்க சிறிலங்கா இராணுவத்துக்கு உத்தரவு

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, சிறிலங்கா இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ரணில் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் – மகிந்த

ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருக்கும் போது  அவரது ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை, அவர் நாட்டில் இருக்கும் போதே ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ரவிராஜ் கொலை வழக்கு – சட்ட மாஅதிபரும் மேல்முறையீடு செய்ய திட்டம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.