மேலும்

நாள்: 5th January 2017

புதிய போர் விமானக் கொள்வனவு குறித்து இன்னமும் முடிவு இல்லை

மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிதாக கொள்வனவு செய்யப்பட வேண்டிய பல நோக்குப் போர் விமானத்தின் தேவைப்பாடுகள் குறித்த செயல்முறைகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கலப்பு நீதிமன்ற பரிந்துரையை வரவேற்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை, கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரவேற்றுள்ளார்.

கோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரவணைப்பிலேயே இருந்தது என்று,  சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு

கடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் இராணுவத் தளமா? – சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டையில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள எதிர்பார்க்கக் கூடும் என்று வெளியாகும் தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ரணிலுக்கு முதுகில் குத்தமாட்டேன் – மகிந்த

ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது  ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன் என்றும், எனவே அவர் அச்சமின்றி, பாதுகாப்பாக சுவிற்சர்லாந்து சென்று வரலாம் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.