மேலும்

நாள்: 21st January 2017

ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு, கொழும்பில் பரவலாக போராட்டங்கள் – படங்கள்

தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கொழும்பு நிதி நகரத்துக்கான 28 வீத நிலப்பரப்பு கடலில் இருந்து மீட்பு

கொழும்பு நிதி நகரத்தை அமைப்பதற்காக, கடலில் இருந்து 28 வீத நிலப்பரப்பு உருவாக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நிலப்பரப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும் என்றும் சீன துறைமுக பொறியியல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

45 ஆவது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். வொசிங்டனில் நேற்று நடந்த இந்த விழாவில், அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ஜி.ரொபேர்ட்ஸ், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச்சு – ரணில்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

லசந்த படுகொலை – சரத் பொன்சேகாவிடம் பல மணிநேரம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

உச்சக்கட்டத்தில் ஏறு தழுவுதல் ஆதரவுப் போராட்டம் – பணிகின்றன மத்திய, மாநில அரசுகள்

ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.