மேலும்

ரவிராஜ் கொலை வழக்கு – சட்ட மாஅதிபரும் மேல்முறையீடு செய்ய திட்டம்

N.Ravirajமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டதையடுத்து, வழக்கின் பதிவுகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளரிடம் தாம் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட ஐந்து பேரும், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டவாளரான எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *