மேலும்

மாதம்: December 2016

அம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

மலேசியாவில் சிறிலங்கா அதிபர் தங்கும் விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் அங்கு தங்கவுள்ள விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி மீதான குற்றச்சாட்டு – பாதுகாப்பு அமைச்சு விசாரணை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தாக்கினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பொருட்களை ஏற்றியிறக்கும் சிறிலங்கா கடற்படை

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணியாளர்கள் ஒருவாரமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சிறிலங்கா கடற்படையினர், துறைமுகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமாறுகால நீதி, நல்லிணக்கத் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு 1.7 மில்லியன் டொலரை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் – சிவ்சங்கர் மேனன்

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஒருவாரம் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் இராட்சத கண்காணிப்பு விமானம்

அமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.

வர்தா புயல் கோரத் தாண்டவம் – சென்னையில் பேரழிவுக் காட்சி

வங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.