மேலும்

நாள்: 3rd July 2016

தேஜஸ் போர் விமானங்களை நட்பு நாடுகளுக்கு விற்கத் தயார்- இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை நட்புநாடுகளுக்கு விற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில்

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாத காலப் பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 855.4 மில்லியன் டொலரை வழங்குவதாக வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான நிதியை சீனாவே வழங்கவுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நவீனமயப்படுத்தப்படவுள்ள சிறிலங்காவின் விவசாயத்துறை – உலக வங்கி ஒப்புதல்

சிறிலங்காவின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் அனைத்துலக அபிவிருத்தி அமைப்பால் (International Development Association- (IDA) சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ள 125 மில்லியன் டொலர் கடனுதவிக்கு உலகவங்கி அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த தெலங்கானா மாநிலம் அக்கறை

சிறிலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளுடன், சுற்றுலா, சுகாதாரம், சமூகத் துறைகளில், உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக இந்தியாவின் தெலங்கானா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பூரில் மாற்று மின்திட்டம் – இன்னும் இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை

சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதா அல்லது அனல் மின் நிலையத்தை அமைப்பதா என்பது குறித்து சிறிலங்கா இன்னமும் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

வியாங்கொட ஆயுதக் களஞ்சியம் அம்பேபுஸ்ஸவுக்கு மாற்றம்

வியாங்கொட இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பிரதான ஆயுதக் களஞ்சியத்தை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் நியமனம் – திரைமறைவில் நடந்தது என்ன?

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் தொடர்பாக, கொழும்பு அதிகாரமட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.