மேலும்

நாள்: 30th July 2016

மகி்ந்த அணியினர் கொழும்பில் குழப்பம் விளைவிப்பதை தடுக்க கடும் பாதுகாப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக் குழப்பும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு முழு அளவில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து தேசிய நீரியல் வளப் பண்ணைத் திட்டம் மாற்றப்படுகிறது

மட்டக்களப்பில் 4000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவிருந்த தேசிய நீரியல்வளப் பண்ணை, பல்வேறு தரப்புகளில் இருந்தும் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளால், வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழரின் தனித்துவத்தை வலியுறுத்தினார் விக்னேஸ்வரன்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.