பாகிஸ்தான் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில், காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது.