மேலும்

நாள்: 14th July 2016

சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருங்குவது ஏன்? – நிஷா பிஸ்வால் அளித்த விளக்கம்

சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்மைகள், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும்  பொருளாதாரத்தில் நெருக்கமான செல்வாக்கை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால்.

நீதிமன்றத்தை முட்டாளாக்க முயன்று நீதிபதியிடம் வாங்கிக்கட்டினார் 58 ஆவது டிவிசன் தளபதி

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலுக்குப் பதிலாக, புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் பட்டியலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த, 58 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியை முல்லைத்தீவு நீதிவான் கடிந்து கொண்டார்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க உதவிச்செயலர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரணிலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உறுதிமொழி

சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா படைகளுக்கு அபிவிருத்தி செயற்பாடுகளில் முக்கிய இடம் – அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், சிறிலங்கா படைகளை காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக, சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்போம் – கூட்டமைப்பிடம் நிஷா பிஸ்வால் உறுதி (படங்கள்)

அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

வட-கிழக்கின் முதல்வராக முஸ்லிம் ஒருவரை ஏற்கவும் தயார் – இரா.சம்பந்தன்

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒருவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.