மேலும்

நாள்: 22nd July 2016

மகிந்த ராஜபக்சவை நீக்க ரணில் எதிர்ப்பு

மத்தல விமான நிலையம்,  மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே அடுத்த நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை யாழ்ப்பாணம் அனுப்பமாட்டோம்- சிங்கள மாணவர்களின் பெற்றோர்

தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள சீன- சிறிலங்கா நெருக்கம்

சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது.