வெளிநாட்டு நிறுவன உதவியுடன் திருகோணமலையில் பெருநகர திட்டமிடல் ஆய்வு
திருகோணமலைப் பெருநகரப் பிரதேசத்தில், வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் திட்டமிடல் மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தி்ல், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், முன்வைக்கப்பட்டது.
விவசாய மற்றும் மின்சக்தி கேந்திரமாகவும், உற்பத்தி மற்றும் சுற்றுலா வலயமாகவும், திருகோணமலையை அபிவிருத்தி செய்ய முடியும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இதனைப் பெருநகரத் திட்டமாக வடிவமைப்பதற்கு, நன்கு அனுபவம் கொண்ட வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டமிடல் உதவியைப் பெறுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.