மோதலில் ஈடுபட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரகாலம் இடைநிறுத்தம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களுக்குக் காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில், பிரதி அமைச்சர் பாலித தேவாரப்பெருமவும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவும், ஒரு வாரகாலம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை முதல் இவர்கள், நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய, இன்று சபையில் அறிவித்தார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குழப்பநிலையின் போது, ஐதேக உறுப்பினர் சண்டிப் சமரசிங்க தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பரிந்துரைக்கு அமையவே, சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.