மேலும்

மேஜர் ஜெனரல் மானவடுவுக்கு 3 மணி நேர சத்திரசிகிச்சை

Maj Gen SR Manawadugeசிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவுக்கு  நரம்பியல் நிபுணரின் உதவியுடன் மூன்று மணிநேர அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெல்கந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தனது தனிப்பட்ட வீட்டைப் பார்வையிடச் சென்றிருந்த போது நேற்றுக்காலை 6.40 மணியளவில், மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் தலையில் பாரிய மரக்குற்றி ஒன்று விழுந்தது.

இதனால் தலையில் படுகாயமடைந்த நிலையில், இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 3 மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நரம்பியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன் மருத்துவர்களின் குழுவொன்று இந்த சிக்கலான சத்திரசிகிச்சையை மேற்கொண்டது.

இதையடுத்து, அவர், அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *