பிள்ளையானை நாளை வரை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா காவல்துறை முடிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.