மேலும்

நிறைவுக்கு வந்தது புனேயில் நடந்த இந்திய – சிறிலங்கா படைகளின் 14 நாள் கூட்டுப் பயிற்சி

indo-sri lanka exஇந்திய – சிறிலங்கா படைகளுக்கு இடையில், ‘மித்ரசக்தி -2015 ‘ என்ற பெயரில் புனேயில் உள்ள இந்திய இராணுவத் தளத்தில் இரண்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

மூன்றாவது முறையாக இடம்பெற்ற இந்த 14 நாள் கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழா, புனேயில் உள்ள ஆன்ட் இராணுவத் தளத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த பயிற்சி நிறைவு விழாவில் நடந்த அணிவகுப்புக்கு,  இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஆசிஸ் குமார் தலைமை தாங்கினார்.

indo-sri lanka ex

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் கே.பி.அருண ஜெயசேகர, இந்திய இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர், தபான் லால் ஷா ஆகியோர் அணிவகுப்பை பார்வையிட்டனர்.

சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் அருண ஜெயசேகரவின் உரையுடன், இந்த கூட்டுப் பயிற்சி நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *