மேலும்

நாள்: 7th October 2015

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் 4 சிறிலங்கா படையினருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை

விசுவமடுவில் பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, வயோதிப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நான்கு சிறிலங்கா படையினருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால்….?

சிறிலங்காவின் புதிய நீதிப் பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் காத்திரம்மிக்க பங்களிப்பு உறுதி செய்யப்படத் தவறினால், சிறிலங்காவின் வன்முறைக் கலாசாரம் மேலும் பலம்பெறுவதுடன் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான நகர்வுகளும் பாதிக்கப்படும்.

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழு – நியமிக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக்  கண்காணிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்களை உள்ளடக்கிய அனைத்துலக கண்காணிப்புக் குழுவொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமிக்கவுள்ளது.

அனல்மின் நிலைய திட்டம் சம்பூரில் இருந்து பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றம்?

திருகோணமலை, சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத்தை, திருகோணமலை துறைமுக நுழைவாயில் பகுதியான பவுல் பொயின்ற் பகுதிக்கு மாற்றுமாறு இந்தியாவிடம், சிறிலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் அபிவிருத்தி, கடல் கண்காணிப்புக்கு உதவவுள்ளது ஜப்பான்

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு உதவவும், கடல்சார் கண்காணிப்பு ஆற்றலை வலுப்படுத்தவும், ஜப்பான் உதவ முன்வந்துள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்புடன் பேச்சுக்களைத் தொடங்கி விட்டோம் – ஜப்பானில் ரணில்

அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே  பேச்சுகளை ஆரம்பித்து விட்டதாக நேற்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய  சிறப்புரையில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐ.நா- சிறிலங்கா இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாம் – மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.