நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்ற சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி
நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர். திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள, நீருக்குள் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டறியும் சோனார் கருவி மற்றும் ரோபோக்களை பயன்படுத்தி கண்ணிவெடிகள் மற்றும், நீருக்குள் காணப்படும் பொருட்களை கண்டறிவதற்கே, சிறிலங்கா கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகப் பகுதியில் போரின் போது பயன்படுத்தப்பட்டு. வெடிக்காத நிலையில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் பொருட்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கே, இந்தப் பயிற்சிகள் உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், “நிலத்தில் அல்லது கடலில் என, சிறிலங்கா முழுவதிலும் கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
போரின் எச்சங்களாக காணப்படும் இவற்றை அகற்றுவதன் மூலம், இலங்கையர்கள் பாதுகாப்பாக வாழ்வதனையும், பணியாற்றுவதனையும் உறுதி செய்வதற்கு நாம் உதவுகின்றோம்.
திருகோணமலைத் துறைமுகத்தின் வர்த்தச் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கான ஆற்றலையும் இந்த முயற்சி அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இனிமேல் அமெரிக்க கண்ணிவெடிகளே பயன்படுத்தப்படும். பாதுகாப்பானவை, நம்பிக்கையானவை, நாணய மானவை. ஐ.நா. மனித உரிமைச் சபையினால் பரீட்சித்து தரச் சான்றிதழ் பெறப் பட்டவை. எமது அரசியல் தலைவர்களின் நிபுணத்தவத்தில் தயாரானவை.