மேலும்

மாதம்: September 2015

அனைத்துலக நீதிமன்ற விசாரணையையே கோருகிறது கூட்டமைப்பு – மாவை சேனாதிராசா விளக்கம்

இன்னொரு அனைத்துலக விசாரணை தேவையில்லை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக நீதிமன்ற விசாரணையே தேவை என்பதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் ஏற்கமாட்டோம் – இரா.சம்பந்தன் உறுதி

தமிழ்மக்கள் விரும்பாத எந்தத் தீர்வையும் தாம் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் அடுத்தவாரம் நியமனம்

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம்  நிறைவடைந்து விடும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- என்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

போர்க்குற்றங்களில், மகிந்த ராஜபக்சவோ  கோத்தாபய ராஜபக்சவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே ஜெனிவா செல்வது பற்றி முடிவு – சுமந்திரன்

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்குப் பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி – பதவியேற்பு நிகழ்வு மீண்டும் ஒத்திவைப்பு

புதிய கூட்டு அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. நாளையே 5 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

வடகிழக்கு கரையோரக் காடுகளில் வெளிநாட்டுப் படையினருடன் சிறிலங்கா படைகள் போர்ப் பயிற்சி

வடக்கு- கிழக்கு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும், நீர்க்காகம்- 2015 போர்ப் பயிற்சியில், 53 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்பதாக, சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து பாதுகாப்பு நாளைக் கொழும்பில் கொண்டாடியது பாகிஸ்தான்

சீனாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் சிறிலங்காவில் தனது பாதுகாப்பு நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியுள்ளது. பாகிஸ்தானின் 50ஆவது  பாதுகாப்பு நாள் நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது.

பிரகீத் கடத்தல்- மேலும் மூன்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்படிவம் தொடர்பாக மேலும் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனல்-4 காணாளி குறித்த சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை தீவிரம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடங்குவதற்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தில் காணப்படும் படையினரை அடையாளம் காணும் விசாரணைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.