மேலும்

மாதம்: December 2019

வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளார்.

விரல் நுனியில் குடிமக்களின் அனைத்து தரவுகளும் – கோத்தாவின் புதிய திட்டம்

சிறிலங்காவின் அனைத்துக் குடிமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீனிடம் சிஐடியினர் விசாரணை

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீனிடம், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

சுவிஸ் தூதரக பணியாளர் பிணையில் விடுதலை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ஓய்வு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ( டிசெம்பர் 31) ஓய்வுபெறவுள்ளார்.

ராஜித சேனநாயக்க பிணையில் விடுவிப்பு

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, பிணை வழங்கி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

4.8 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா

2020 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியினி் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இன்று முற்பகல், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெறும் கையுடன் திரும்பிய சிறைச்சாலை அதிகாரிகள் – தனியார் மருத்துவமனையில் ராஜித

கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றும் நடவடிக்கை நேற்று கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

மட்டக்களப்புக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

மட்டக்களப்பு வரை விமான சேவைகளை விரிவாக்குவதற்கு இந்தியா ஆர்வம் காட்டுவதாக, சிறிலங்காவின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.