மேலும்

மாதம்: December 2014

நுவரெலிய பிரதேசசபையில் ஆட்சியை இழக்கிறது ஆளும் கூட்டணி

நுவரெலிய பிரதேசசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணியும், திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும் விலக முடிவு செய்துள்ளதையடுத்தே, இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்தவை ஆதரிக்கும் அதிகாரிகள் மீது வெளிநாட்டு பயணத்தடை – எதிரணியின் கிடுக்கிப்பிடி

தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்க மற்றும் இராணுவ, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள சிறுமிகள் வன்புணர்வுச் சம்பவங்கள்

யாழ்ப்பாணத்தில், வயது குறைந்த சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக, யாழ்.போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடா: ஈழத்தமிழ் அறிஞருக்கு கனேடிய நாடாளுமன்றம் மதிப்பளிப்பு

“பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள் நவம்பர் 22 அன்று அமரராகினார். இவரது இழப்பானது கனடாவுக்குப் பாரியதொரு இழப்பாகும். புலமைவாதி ஒருவரை பண்பாளன் ஒருவரை கனடா இழந்துவிட்டது. பேராசிரியர் அவர்கள் இவரது சக புலமைவாதிகளாலும் இவரது மாணவர்களாலும் நன்கு போற்றப்படுகிறார்” – நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்னோல்ட் சான்.

மைத்திரியின் சுகாதார அமைச்சைக் கைப்பற்றினார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐதேகவில் இருந்து அரசதரப்புக்குத் தாவிய திஸ்ஸ அத்தநாயக்க சிறிலங்காவின் புதிய சுகாதார அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.

ஹெல உறுமயவை உடைத்தார் மகிந்த – அரசதரப்புக்குப் பாய்ந்தார் உதய கம்மன்பில

மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது மகிந்த அரசு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றுடன் இழந்துள்ளது.

நுவரெலிய மாவட்டத்தில் வெறுமையாகும் மகிந்தவின் கூடாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் எதிரணியின் பக்கம் திரும்பியுள்ளதால், நுவரெலிய மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையை இழந்துள்ளது.

வடக்கு மாகாணசபை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் – இரகசியமாக நடந்த பதவியேற்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இருந்த சில அமைச்சுப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையில் உள்ள  ஏனைய மூன்று அமைச்சர்களிடம் இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.