மேலும்

நுவரெலிய பிரதேசசபையில் ஆட்சியை இழக்கிறது ஆளும் கூட்டணி

SLFPநுவரெலிய பிரதேசசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணியும், திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும் விலக முடிவு செய்துள்ளதையடுத்தே, இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

21 உறுப்பினர்களைக் கொண்ட நுவரெலிய பிரதேசசபையில், மலையக மக்கள் முன்னணிக்கு 7 உறுப்பினர்களும், தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5 ஆசனங்கள் உள்ள நிலையில், நுவரெலிய பிரதேசசபையில் எதிரணியின் பலம் 16 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நுவரெலிய பிரதேசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *