மேலும்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது மகிந்த அரசு

parliamentசிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்து வந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றுடன் இழந்துள்ளது.

நேற்று ஆளும் கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஸ்ணன் ஆகியோர் வெளியேறியதையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 161 உறுப்பினர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்தது.

அண்மைய நாட்களில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியுடன் இணைந்துள்ள நிலையில், ஆளும் கூட்டணியின் பலம் 149 ஆக குறைந்துள்ளது.

இது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான 150 ஆசனங்களை விட ஒன்று குறைவானதாகும்.

வரும் ஜனவரி 8ம் நாள் சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது சிறிலங்கா அதிபருக்கு முக்கியமான அரசியல் பின்னடைவு என்று அனைத்துலக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *