மேலும்

நாள்: 18th December 2014

மைத்திரியை குறிவைத்து கிளைமோர் குண்டுகள் – கொலை முயற்சியில் இருந்து தப்பினார்

நிட்டம்புவவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்காக கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மகிந்தவுக்கு சுமந்திரன் பதிலடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டுவது போன்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நீதியான தேர்தல் நடத்தக் கோரி சிறிலங்கா தேர்தல் செயலகம் முன் போராட்டம்

தேர்தல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சிறிலங்கா தேர்தல்கள் செயலகத்தின் முன்பாக இன்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அரபுலக புரட்சி போல சிறிலங்காவில் ஏற்பட விடமாட்டேன் – முல்லைத்தீவில் மகிந்த சூளுரை

ஈராக்கிலோ, லிபியாவிலோ, எகிப்திலோ நிகழ்ந்தது போன்று சிறிலங்காவில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் தனியொரு குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுமா?

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஜனவரி 08 தேர்தலில் வெற்றி பெற்றால், சிறிலங்காவானது மேலும் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதாரத்துடன் இணைந்த அதிகாரத்துவம், சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் இனவாதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாடாக மாறும்.

‘பாப்பரசர் எம்முடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் – முள்ளிவாய்க்கால் மக்களின் வேண்டுதல்

பாப்பரசர் எமது இடத்துக்கு வந்து, எம்முடன் இணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்றும், வடக்கிலுள்ள தமிழர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியை உடைக்க சிஐஏ சதி – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு, மேற்குலக நாடுகள் சதி செய்வதாகவும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ இதுபோன்ற வேலைகளைச் செய்வது வழக்கமே என்றும் அமெரிக்கா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.

மகிந்தவுக்கு மைத்திரி சவால் – பகிரங்க விவாதம் நடத்த வருமாறு அழைப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தன்னுடன் பகிரங்கமான நேரடி விவாதம் நடத்த வருமாறு, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

வவுனியாவில் ஆணைக்குழுவைத் திணறவைத்த முறைப்பாடுகள்

வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமற்போனோர் குறித்து, சிறிலங்கா அதிபர் நியமித்த ஆணைக்குழுவிடம் புதிதாக 328 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.