மேலும்

நாள்: 13th December 2014

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பிரித்தானியா ஆதரவு – இரகசிய ஆய்வையடுத்து முடிவு

சிறிலங்காவில் ஆட்சிமாற்ற ஏற்படுவதற்கு பிரித்தானியாவின் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார் ஹிருணிகா

அண்மையில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, சிறிலங்காவை விட்டு வெளியேறி, பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அனைத்துலக ஆலோசனைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் நியமனம்

வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா : ‘அதிபர் ராஜபக்சவும் அவரது அதிகாரம் மிக்க சகோதரர்களும் பதவியை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள்’

தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

810 இணையத்தளங்களை குறிவைக்கிறது சிறிலங்கா?

வெளிநாடுகளில் இருந்து செயற்படும் – சிறிலங்கா குறித்த செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மனித உரிமைகள் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆய்வு நடத்த இந்திய அரசு முடிவு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

“தோல்வியுற்றால் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன்” – ஆயர்களுக்கு மகிந்த வாக்குறுதி

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால், எந்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இதொகாவுக்குள் பிளவு – மைத்திரியை ஆதரிக்க ஒரு பகுதியினர் முடிவு

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதொகாவுக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.