மேலும்

மாதம்: December 2014

மனித உரிமைகள் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆய்வு நடத்த இந்திய அரசு முடிவு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

“தோல்வியுற்றால் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன்” – ஆயர்களுக்கு மகிந்த வாக்குறுதி

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால், எந்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இதொகாவுக்குள் பிளவு – மைத்திரியை ஆதரிக்க ஒரு பகுதியினர் முடிவு

அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதொகாவுக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

புலியின் குகையாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது குற்றத்தின் மையம்?

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.

சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு

முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்ரனோவ் விமானத்துக்கு என்ன நடந்தது? – விரிவான தகவல்கள்

கொழும்புக்கு அருகே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில், நான்கு சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அன்ரனோவ் விமானங்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன் வாக்குறுதி

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிந்த பின்னர், இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை தாமே வடக்கு மாகாணசபையில் முன்மொழிந்து விவாதிக்க ஏற்பாடு செய்வதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை விமானம்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (புதிய தகவல்கள் இணைப்பு)

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்தல்

ஐ.நா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.