முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பம் – ஒப்புக்கொண்டார் ஹக்கீம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புக்கொண்டுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
நுவரெலிய பிரதேசசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணியும், திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும் விலக முடிவு செய்துள்ளதையடுத்தே, இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் எதிரணியின் பக்கம் திரும்பியுள்ளதால், நுவரெலிய மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையை இழந்துள்ளது.
மாத்தளை மாவட்ட மருத்துவமனைக்குப் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், 1950ம் ஆண்டுகளின் துவக்கத்தில் புதைக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மலையகத்தில், மீரியபெத்த நிலச்சரிவின் போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகளைக் கைவிடவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.