மைத்திரியின் சுகாதார அமைச்சைக் கைப்பற்றினார் திஸ்ஸ அத்தநாயக்க
ஐதேகவில் இருந்து அரசதரப்புக்குத் தாவிய திஸ்ஸ அத்தநாயக்க சிறிலங்காவின் புதிய சுகாதார அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.
கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
ஐதேகவின் பொதுச்செயலராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த அரசதரப்புக்குத் தாவியிருந்தார்.
அவருக்கு எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன முன்னர் வகித்து வந்த சுகாதார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.