மேலும்

வடக்கு மாகாணசபை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் – இரகசியமாக நடந்த பதவியேற்பு

northern-provincial-councilவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இருந்த சில அமைச்சுப் பொறுப்புகள், மாகாண அமைச்சரவையில் உள்ள  ஏனைய மூன்று அமைச்சர்களிடம் இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்வில் மூன்று அமைச்சர்களும் தமது மேலதிக அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

முதலமைச்சரின் வசம் இருந்த, கூட்டுறவுத்துறை, நீர் வழங்கல் – வடிகாலமைப்பு துறை, வீதி அபிவிருத்தி,  மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சு ஆகிய 7 துறைகளுமே இவ்வாறு பகிர்ந்தளி்க்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் மேலதிகமாக மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சும்,

விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசனிடம் கூட்டுறவுத்துறை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சும்,

மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் வீதி அபிவிருத்தி அமைச்சு பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வட மாகாண ஆளுநரின் செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவது வழமையென்ற போதிலும், நேற்று இடம்பெற்ற அமைச்சர்களின் பொறுப்பேற்பு நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *