மேலும்

இதொகாவுக்குள் பிளவு – மைத்திரியை ஆதரிக்க ஒரு பகுதியினர் முடிவு

mahinda-arumuganஅடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதொகாவுக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதொகாவில் உள்ள ஒரு பிரவினர், இந்த தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊவா, மற்றும் மத்திய மாகாணசபை அமைச்சர்கள் மற்றும், உறுப்பினர்களே இவ்வாறு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய மாகாணசபையின் அமைச்சர் உதயகுமார் தலைமையில், எதிரணியுடன் இவர்கள் இணைந்து கொண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *