மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

மகிந்தவைத் தோற்கடிக்கும் திட்டத்தில் நிமால் சிறிபாலவும் பங்கெடுத்தார் – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்கும், திட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் அங்கம் வகித்திருந்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

புதிய கட்சி, கூட்டணி அமைக்கும் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

தாம் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவோ அல்லது புதிய அரசியல் கூட்டணி ஒன்றைத் துவங்கவோ போவதில்லை என்று சிறிலங்காவின்  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்புப் பட்டியலில் சிறிலங்கா

தமது காலக்கெடுவுக்குள் சட்டவிரோத ஆழ்கடல் மீன்பிடிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காக, சிறிலங்காவை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

மகிந்தவின் மகன் குறித்த விசாரிக்க சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார், வெளிநாட்டில் பயிற்சிக்கு எவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள் – மைத்திரிபால

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சித்திரவதைக்குட்படுத்திக் கொலை செய்யும் விரிவான திட்டத்தை முன்னைய ஆட்சியாளர்கள் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – இரண்டு வாரங்களில் முடிவு

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்று இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்கு மகிந்த ராஜபக்சவே காரணம் – ரணில்

சிறிலங்காவில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்ட தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு நெருக்கமான 29 இராஜதந்திரிகளை நாடு திரும்ப உத்தரவு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ள 29 பேரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.