மேலும்

மகிந்தவைத் தோற்கடிக்கும் திட்டத்தில் நிமால் சிறிபாலவும் பங்கெடுத்தார் – ராஜித சேனாரத்ன

nimal siripala de silvaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்கும், திட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வாவும் அங்கம் வகித்திருந்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்கும் ஆரம்பத் திட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவும் பங்கெடுத்திருந்தார்.

ஆனால், அவர் கடைசி நேரத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.

உண்மையான திட்டத்தின்படி, கடந்த நொவம்பர் மாதம் நிமால் சிறிபால டி சில்வா எதிரணியின் மேடைக்கு வந்திருக்க வேண்டும்.

அது நடந்திருந்தால், சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன, அவரை கட்சியில் இருந்து நீக்க மறுத்திருப்பார்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர், பிரதமராக நியமிப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததையடுத்து, நிமால் சிறிபால டி சில்வா தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்” என்றும் அமைச்சர் ராஜித சேனாரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *