மகிந்தவின் மகன் குறித்த விசாரிக்க சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட்டார், வெளிநாட்டில் பயிற்சிக்கு எவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்கவிடம், ஜேவிபி செய்த முறைப்பாட்டையடுத்து சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் மகன் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது மற்றும், அவர் பிரித்தானியாவின் மதிப்புமிக்க ரோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜேவிபி கோரியிருந்தது.
இதனடிப்படையிலேயே பாதுகாப்புச் செயலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட யோசித ராஜபக்ச குறுகிய காலத்திலேயே அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.