தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் என்னைக் கொன்றிருப்பார்கள் – மைத்திரிபால
அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் சித்திரவதைக்குட்படுத்திக் கொலை செய்யும் விரிவான திட்டத்தை முன்னைய ஆட்சியாளர்கள் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
