மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று இறுதி முடிவு – அனந்திக்கு வேட்புமனு நிராகரிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

நிச்சயமற்ற நிலையில் மகிந்த – அனுராதபுர கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேடையேறவிருந்த அனுராதபுர கூட்டம் திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரமாக சந்திக்க மேற்குலக தூதுவர் முயற்சி – நழுவுகிறார் மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளித்ததையடுத்து, எழுந்துள்ள புதிய அரசியல் சூழல் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்த மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும்,  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு மூன்று மாத சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத சேவை நீடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியாக பெயரை மாற்றியது ஜாதிக ஹெல உறுமய

சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய கட்சி, தனது பெயரை, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என மாற்றிக் கொண்டுள்ளது. சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தகவல் சேகரிக்கிறது இந்தியா

யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் முயற்சியில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

மொஸ்கோவுக்கு அழைக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஸ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவுக்கு இடமளித்ததால் வெளியேறினார் சம்பிக்க – உள்ளே வந்தார் தினேஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.