சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு மூன்று மாத சேவை நீடிப்பு
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேராவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத சேவை நீடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி ஜெயந்த பெரேராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் நாளுடன் நிறைவடைந்தது.
எனினும், அவர், வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் நாள் வரை கடற்படைத் தளபதி பதவியில் தொடர்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார்.
தேர்தல் காலத்தில், சிறிலங்கா ஆயுதப்படையினரின் இடமாற்றங்கள், சேவை நீடிப்புகள் தொடர்பாக, அவர்களின் சேவையின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கமுடியும் என்பதன் அடிப்படையிலேயே இந்த சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், புதிய கடற்படைத் தளபதி நியமனம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.