சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்
சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார்.
நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே, மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக மரணமானதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர் சிறிலங்கா இராணுவத்தில் முக்கியமான பல பதவிகளை வகித்திருந்தவர் என்பதுடன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய வந்தார்.
இவரது பொறுப்பின் கீழேயே முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.