யாழ்ப்பாணத்தில் தகவல் சேகரிக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்தில் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் முயற்சியில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசிப்போரில், ஹிந்தி மொழியைப் பேசத் தெரிந்தவர்கள், எழுதத் தெரிந்தவர்கள், வாசிக்கத் தெரிந்தவர்கள் தொடர்பான விபரங்களே சேகரிக்கப்படுகின்றன.
ஹிந்தி மொழி தெரிந்தவர்களின் பெயர், விபரங்கள், பிறந்த நாள், முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரிப்பதற்கான படிவங்களும், அச்சிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த விபரங்கள் சேகரிப்புக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.