மேலும்

தமிழர்களுக்கு சுயாட்சி பற்றிய ரணிலின் கருத்து – கவனத்தில் கொண்டுள்ளதாம் இந்தியா

தமிழ் மக்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக் குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம்

தமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப விரைவில் நடவடிக்கை? – புதுடெல்லியில் முக்கிய பேச்சு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவது குறித்து, இந்திய-சிறிலங்கா அரசாங்கங்கள் மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன.

கோத்தாபய திறந்த சர்ச்சைக்குரிய வங்கிக்கணக்கில் 13.2 பில்லியன் ரூபா

சர்ச்சைக்குரிய வகையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பேணப்பட்டு வந்த தனியான வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்த 13.2 பில்லியன் ரூபா பணத்தை, திறைசேரிக்கு மாற்றும்படி சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

‘றோ’வினால் தேர்தலில் வெற்றி பெறவில்லை – மங்கள சமரவீர

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது, மக்களாலேயே தவிர, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வினால் அல்ல என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

‘றோ’ அதிகாரியின் இடமாற்றம் வழக்கமானது – என்கிறது இந்தியா

கொழும்பில் இருந்து ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்படவில்லை என்றும் அது வழக்கமான இடமாற்றமே என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015’ – சிலம்பு அமைப்பின் அறிக்கை

பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015’ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்

புதிய அரசாங்கம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாது என்றும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மகிந்த பதுக்கி வைத்திருந்த 3000 துப்பாக்கிகள், லம்போகினி கார், 68,000 மணிக்கூடுகள் மீட்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

புதுடெல்லியில் மங்கள – சுஸ்மா சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் இன்று மதியம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.