மேலும்

மகிந்த குருநாகலவில், சமல் அம்பாந்தோட்டையில் போட்டி?

mahinda-medamulanaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்திலும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நம்பமான வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும், தாம் போட்டியிடும் மாவட்டங்களின் வேட்பாளர் குழுத் தலைவர்களாக இருப்பர் என்றும், மகிந்த ராஜபக்ச நாடு முழுவதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக பரப்புரை மேற்கொள்வார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, சமல் ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்றும், வரும் 13ஆம் திகதி உண்மை தெரிய வரும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த நேற்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *