மேலும்

கொழும்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

sarath fonsekaஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இம்முறை ஜனநாயக கட்சி சார்பில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து, வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளார்.

சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கொழும்பு மாவட்ட தலைமை வேட்பாளராக நளின் பிரதீப் போட்டியிடுகிறார்.

அதேவேளை, கம்பகா மாவட்டத்தில், அனுருத்த  லெக்கமகே தலைமையில், போட்டியிடும்  ஜனநாயக கட்சியில் அனோமா பொன்சேகா வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இரு மாவட்டங்களிலும் வேட்புமனு இன்று கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஏனைய மாவட்டங்களில்  நாளை அல்லது திங்கட்கிழமை வேட்புமனுக்கள் கையளிக்கப்படும் என்றும் ஜனநாயக கட்சியின் செயலர் ஆனந்த மானவடு தெரிவித்துள்ளார்.

எனினும், தமது கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் போட்டியிடவி்ல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *