மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்தவை நாங்கள் தோற்கடிக்கவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறது பிரித்தானியா

சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக, பிரித்தானிய, அமெரிக்க, இந்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றியதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டை, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் நிராகரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ரணில் பங்கேற்ற நிகழ்வுகளை வடக்கு மாகாணசபை புறக்கணிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் ஆளும்தரப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை.

‘மோடியின் அறிவுரையும், யாழ்ப்பாண மக்களின் யதார்த்தமும்’ – இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

சீன நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்- மைத்திரியிடம் வலியுறுத்தினார் சீன அதிபர்

சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்களின் சட்டரீதியான நலன்களை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக, சீனாவின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியப் போர்க்கப்பல்கள் திருக்கோணமலைக்கு வருகின்றன

மூன்று நாள் பயணமாக இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படையணியைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு இன்று வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்

கோடரியால் தலையில் வெட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில், பொலன்னறுவவில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டுகிறார் சிறிலங்கா பிரதமர் ரணில்

வடக்கு மாகாண நிலவரங்களை நேரில் மதிப்பீடு செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தொடக்கம், மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். யாழ். நாகவிகாரையில் வழிபாட்டுடன், அவரது வடக்கிற்கான பயணம் ஆரம்பமாகவுள்ளது.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப் – பரிந்துரைத்தார் ஒபாமா

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலராகப் பணியாற்றும், அதுல் கெசாப்பின் பெயரை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு படுகாயம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான, பிரியந்த சிறிசேன இன்று மாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், பொலன்னறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரியின் தடையை மீறி இரத்தினபுரிக் கூட்டத்தில் குவிந்த சுதந்திரக் கட்சியினர்

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலி்யுறுத்தி, இரத்தினபுரியில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி விதித்திருந்த தடையை மீறி, அந்தக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் கலந்து கொண்டுள்ளனர்.