மேலும்

சுவிசில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு நூல் அறிமுக அரங்கு

ki-pi-kanavin-meethi-bookஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளருமான, புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான- கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவையொட்டி அவரது நண்பர்கள், தோழர்கள் எழுதிய நினைவுப் பகிர்வின் தொகுப்பான ‘ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக அரங்கு சுவிசில் நடைபெறவுள்ளது.

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் எதிர்வரும் 19ஆம் நாள் சனிக்கிழமை பி.ப 6 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக தோழர் பா.செயப்பிரகாசம் கலந்துகொள்ளவுள்ளார்.

Haus der Religionen, Europaplatz 1, 3008 Bern என்ற முகவரியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, சுவிஸ் சிவராம் ஞாபகார்த்த மன்றம் மேற்கொண்டுள்ளது.

aravinthan-book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *