மேலும்

பிரிவு: செய்திகள்

சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சியில் திட்டமிட்ட இனஅழிப்பு – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திட்டமிட்ட இனஅழிப்பும் அடக்குமுறைகளும் இடம்பெற்றன என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

காணிகளை மீள ஒப்படைப்பது குறித்து வடக்கு ஆளுனருடன் கத்தரின் ருசெல் அம்மையார் பேச்சு

சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்கா படையினர் வசமுள்ள நிலங்களை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது குறித்து, அமெரிக்காவின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் சிறிலங்கா அரச தரப்பினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் மோர்லன்ட் நகர முதல்வரானார் இலங்கைத் தமிழ்ப்பெண்

அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மர்மப்பொருளால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை – கலாநிதி சந்தன ஜெயரத்ன

விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் சிறிலங்காவுக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று  கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று  தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின்,  முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

போர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் – இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம்

உள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ மாநாட்டில் சிறிலங்கா தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை

சிறிலங்கா அரசாங்கம் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இது சிறிலங்கா அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

மர்மப்பொருள் அம்பாந்தோட்டைக்கு அப்பால் கடலிலேயே விழும் – ஆர்தர் சி கிளார்க் மையம்

விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும், விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள, மர்மப்பொருள், அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.

திறந்த அரசுகளின் கூட்டமைப்பில் இணைந்தது சிறிலங்கா

திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் (Open Government Partnership) சிறிலங்காவும் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளது.  மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஆரம்பமான திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொள்வதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்தார்.