மேலும்

பிரிவு: செய்திகள்

’18 பில்லியன் டொலர்’ குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்- நாமல் சவால்

தனது தந்தையோ அல்லது குடும்பத்தினரோ, வெளிநாடுகளில் 8 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதை, நிரூபித்தால் தாம் அரசியலை விட்டே விலகுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்குச் சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

புனேயை விட்டுப் புறப்பட்டது சிறிலங்கா விமானம் – இந்திய அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு

பாகிஸ்தானில் இருந்து குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலையில், புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, இந்திய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மீண்டும் விரைவில் மேடைக்கு வருவேன் என்கிறார் மகிந்த

தாம் விரைவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேடைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை

ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் அதிபர் பாதுகாப்பு பிரிவு கலைப்பு

சிறிலங்கா இராணுவத்தில் இருந்த, அதிபர் பாதுகாப்புப் பிரிவு (President’s Guard) கலைக்கப்பட்டு, அதிலிருந்து படையினர், தத்தமது படைப்பிரிவுகளுக்குச் செல்லப் பணிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் டேவிட் கமரொன் – 4 இலங்கையர்களில் ஒருவரே வெற்றி

பிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமரொன் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.

பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன்,  ஹரோ ஈஸ்ட் தொகுதியில்  கொன்சர்வேட்டிவ்  வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

புனேயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா விமானப்படை விமானம்

சிறிலங்கா இராணுவத்தினருக்கான குதிரைகளை, பாகிஸ்தானில் இருந்து ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின், சி-130 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து, இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மன்னார் ஆயரின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பு

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் ஆண்டகை, தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலை

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி முன்னிலையில் உள்ளது.