மேலும்

மாதம்: April 2026

சரிவைச் சந்தித்த சிறிலங்காவின் சுற்றுலாத்துறை

சிறிலங்காவின் சுற்றுலாத் துறை பல மாத வளர்ச்சிக்குப் பின்னர், மார்ச் மாதத்தில் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கிகளில் ஒன்று செயலிழப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின்,  மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்டிக்கான கும்பல் ஒடுக்கும் படையில் இணைவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

ஹெய்ட்டியில் ஐ.நா ஆதரவுடன் நடைபெறும், சர்வதேசப் பணிக்கு பங்களிப்பது குறித்த சாத்தியங்களை அரசாங்கம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலங்குவானூர்திகளை பழுதுபார்க்கும் ஒப்பந்தம்- இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு எம்ஐ -17 உலங்குவானூர்திகளை  (SMH 599, SMH 596, SMH 588, SMH 4416) பழுதுபார்ப்பதற்காக, ஜோர்ஜிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்

இரண்டு பாகிஸ்தான் கடற்படை போர்க் கப்பல்கள், நல்லெண்ணப் பயணமாக நேற்று  கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ஈரானிய கடற்படைக் கப்பலை திருகோணமலை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்

சிறிலங்காவின் மேற்குக் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய கடற்படையின் விநியோக  கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இழுவைப் படகின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் சிறிலங்கா எங்கே?- ஹர்ஷ டி சில்வா கேள்வி

பிராந்திய மாநாடு ஒன்றில் சிறிலங்கா பங்கேற்காதது குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்தும்  கவலைகளை எழுப்பியுள்ளார்.

இந்திய துணை குடியரசு தலைவர் முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார்

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் 15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு முடிவுகள்

2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, சிறிலங்காவின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரபூர்வ முடிவுகளை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட சீனா இடமளியாது என   சீனத் தூதுவர்  கி சென்ஹொங் தெரிவித்துள்ளார்.