மேலும்

மாதம்: April 2026

நீதிமன்றில் நிறுத்தப்பட்ட பிள்ளையான்- விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

சிறிலங்காவுடன் நீண்டகால எரிசக்தி உடன்பாட்டை எதிர்பார்க்கும் ரஷ்யா

சிறிலங்காவும் ரஷ்யாவும் நீண்டகால எரிசக்தி விநியோகம் தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு  வர முடியும் என ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பு அவசியம்- மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா

நீண்டகால அமைதியையும் உறுதித்தன்மையையும் உறுதி செய்வதற்காக,  கிளிநொச்சியில் வலுவான இராணுவ இருப்பைப் பேணுவதன் மூலோபாய முக்கியத்துவத்தை, சிறிலங்காவின் இராணுவத்தின் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

காலக்கெடுவுக்குள் ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்குவது சாத்தியமில்லை

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா வழங்கியுள்ள விலக்கு ஏப்ரல் 11 ஆம் நாள் காலாவதியாகும் முன்னர், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுடன் ஏற்பாடுகளை இறுதி செய்வது கடினமாக இருக்கும் என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.

குமார ஜயகொடி மீது எந்த நடவடிக்கையும் இல்லை – அமைச்சராக தொடருவார்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.