மேலும்

சிறிலங்கா ஜனாதிபதியின் படத்தை நீக்குமாறு ஊடகங்களுக்கு அழுத்தம்

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய மேதினப் பேரணியில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை நீக்குமாறு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணியில், சிறிலங்கா ஜனாதிபதி உரையாற்றிய போது, கைகளை உயர்த்தப் பிடித்தபடி வானத்தை பார்க்கும் படம் ஒன்றை, ஊடகவியலாளர் லஹிரு ஹர்ஷண எடுத்திருந்தார்.

அந்தப் படம் ஏராளமாகப் பகிரப்பட்டதை அடுத்து அதனை நீக்குமாறு ஊடகவியலாளருக்கும், ஊடகங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இணையத்தில் பகிரப்பட்ட அந்தப் படம் நீக்கப்பட்ட போதும், அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

குறித்த படம் தொடர்பாக, வெளியிடப்படும் கருத்துக்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *