பிறிக்ஸ் இல் இணைய சிறிலங்காவுக்கு உதவத் தயார்- சீனா
பிறிக்ஸ் (BRICS) கூட்டணியில் சிறிலங்கா இணைந்து கொள்வதற்கு, உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் கூட்டமைப்பில், இணைந்து கொள்வதற்கு, சிறிலங்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிறிக்ஸ் உச்சிமாநாட்டில், சிறிலங்கா அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், அவர் அதில் பங்கேற்காமல் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், பிறிக்ஸ் அமைப்பை விரிவாக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்பதால், சிறிலங்காவின் விண்ணப்பம் பின்னர் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே பிறிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைந்து கொள்வதற்கு உதவத் தயார் என சீனா உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.